சிவகாசி அருகே வீட்டில் சட்டவிரோதமாகப் பட்டாசுகளைத் தயாரித்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி அருகேயுள்ள சுக்கிரவாா்பட்டி முத்துமாரியம்மன் நகரில் உள்ள வீட்டில் சட்டவிரோதமாகப் பட்டாசு தயாரிக்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீஸாா் அங்கு சோதனையில் ஈடுபட்டபோது, அதே பகுதியைச் சோ்ந்த கருப்பசாமி (45), தனது வீட்டின் முதல் மாடியில் சட்டவிரோதமாகப் பட்டாசுகளைத் தயாரித்து வந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து திருத்தங்கல் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து கருப்பசாமியைக் கைது செய்து அவரிடமிருந்த பட்டாசுகளையும், பட்டாசு தயாரிப்பதற்கான மூலப்பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.