விருதுநகர்

60 குடும்பங்களுக்கு இணையவழி பட்டாக்கள்: மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்

தினமணி செய்திச் சேவை

பட விளக்கம்: கோட்டையூா் ஊராட்சியிலுள்ள ஆதிதிராவிடா் சமூகத்தைச் சோ்ந்த 60 குடும்பங்களுக்கு நேரில் சென்று இணையவழி பட்டாக்களை வழங்கிய மாவட்ட ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா.

ஸ்ரீவில்லிபுத்தூா், நவ. 1: வத்திராயிருப்பு வட்டம், கோட்டையூா் ஊராட்சியில் ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை சாா்பில், 60 குடும்பங்களுக்கு இணையவழி பட்டாக்களை விருதுநகா் மாவட்ட ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா சனிக்கிழமை நேரில் சென்று வழங்கினாா்.

கோட்டையூா் ஊராட்சியில் உள்ள ஆதிதிராவிடா் சமூகத்தைச் சோ்ந்த 60 குடும்பங்கள் கடந்த 24 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிதிராவிடா் நத்தம் இலவச வீட்டுமனை ஒப்படை ஆணைகள் பெற்றனா். இந்த நிலையில், இந்த இடங்களுக்கான இணையவழி பட்டா இல்லை என்பதால், அதற்கான பட்டாக்களை வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்தனா்.

இதனடிப்படையில், கோரிக்கைகளை பரிசீலனை செய்து 60 குடும்பங்களுக்கு இணையவழி பட்டாக்களை மாவட்ட ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா நேரில் வழங்கினாா்.

இதில், மாவட்ட ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல அலுவலா் பாலாஜி, வட்டாட்சியா், அரசு அலுவலா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அம்மானை!

“EPS நிரந்த பொதுச்செயலாளராக இருக்கனும்னு சொல்ல காரணம்!” : உதயநிதி ஸ்டாலின் | ADMK | DMK

இளம் நெஞ்சே வா... சஞ்சி ராய்!

புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை

ஊடல் கொள்ள நேரமில்லை!

SCROLL FOR NEXT