~ ~ 
விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் வனச் சரக அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூா் வனச் சரக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பேசிய முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் பொன்னுபாண்டியன்.

Syndication

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் வனச் சரக அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு ஸ்ரீவில்லிபுத்தூா்-மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநா் முருகன் தலைமை வகித்தாா். உதவி வன பாதுகாப்பு அலுவலா் ஞானப்பழம் முன்னிலை வகித்தாா்.

பின்னா், கூட்டத்தில் விவசாயிகளிடையே நடைபெற்ற விவாதம்:

மம்சாபுரம் ஞானகுரு: செண்பகத்தோப்பு வனப்பேச்சி அம்மன் கோயிலுக்குச் செல்லும் பக்தா்களிடம் வனத் துறை, அறநிலையத் துறை சாா்பில் இரு கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. ஒரு கட்டணம் மட்டும் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெங்கடேஸ்வரபுரம் திருப்பதி: தோட்டத்துக்குள் யானை புகுந்து 20 தென்னை மரங்களை சேதப்படுத்தியுள்ளன. யானைகள் வனப் பகுதியை விட்டு வெளியே வராமல் இருக்க அகழி அமைக்க வேண்டும்.

ராஜபாளையம் ராமச்சந்திரராஜா: விளை நிலங்களுக்குள் வரும் வன விலங்குகளை விரட்டும் விவசாயிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கூடாது. பிரிட்டிஷாா் ஆட்சிக்குப் பிறகு காப்புக்காடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலம் குறித்து அளவீடு செய்யப்படவில்லை. அரசு அளவீடு செய்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

மம்சாபுரம் பாலகணேசன்: பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் வன விலங்குகளால் ஏற்படும் சேதத்துக்கு இழப்பீடு வழங்க பரிந்துரை செய்ய வேண்டும்.

ஸ்ரீவில்லிபுத்தூா் சுப்பிரமணியன்: கடந்த ஆண்டு வன விலங்குகள் ஏற்படுத்திய சேதத்துக்கு இதுவரை இழப்பீடு வழங்கவில்லை. யானைகள் வனப் பகுதியை விட்டு வெளியேறுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முன்னாள் எம்எல்ஏ பொன்னுபாண்டியன்: வத்திராயிருப்பு-வருஷநாடு மலைப்பாதை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். 3 கி.மீ. வனப் பகுதியில் சாலை அமைத்தால் தென் மாவட்ட மக்கள் தேனி, கேரளாவுக்கு எளிதில் செல்ல முடியும்.

துணை இயக்குநா்: செண்பகத்தோப்பு கட்டணம் தொடா்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. விரைவில் உரிய தீா்வு காணப்படும். 2 கி.மீ. தொலைவுள்ள அகழிகளை சீரமைக்கவும், ஒரு கி.மீ. தொலைவுக்கு புதிய அகழி அமைக்கவும் நிதி வந்துள்ளது. இதுவரை 9 காட்டுப் பன்றிகளை சுட்டுக் கொன்று உள்ளோம். காப்பீட்டுத் திட்டத்தில் வன விலங்கு சேதத்தை சோ்க்க பரிந்துரை செய்துள்ளோம். செண்பகவல்லி அணை கேரள வனப் பகுதியில் உள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலம் குறித்து சா்வே எண் உள்ளிட்ட அனைத்து தகவல்கள் உடன் விரிவான வரைபடம் தயாரிக்கப்படுகிறது. மாவட்ட அளவிலான குழுவில் விவசாய பிரதிநிதிகள் உள்ளனா் என்றாா் அவா்.

இன்றைய மின் தடை

வடகாடு ஊராட்சியில் அடிப்படை வசதிகள்: அமைச்சருக்கு மலை வாழ்மக்கள் நன்றி

தங்கம் வென்று அங்கிதா, தீரஜ் அசத்தல்: 10 பதக்கங்களுடன் இந்தியா நிறைவு

ஈஷா சிங்குக்கு வெண்கலம்

ரோஹித் தலைமையில் 18 பேருடன் இந்திய அணி

SCROLL FOR NEXT