முகப்பு
விருதுநகர்

கல்லூரி மாணவியை தாக்கியவா் கைது

Updated On : 25 மே 2026, 2:12 am IST
கைது... - கோப்புப் படம்
பகிர்:

விருதுநகரில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியைத் தாக்கிய இலங்கைத் தமிழா் கைது செய்யப்பட்டாா்.

விருதுநகா் அருகே உள்ள குல்லூா் சந்தை இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமைச் சோ்ந்த சத்தியசீலன் மகன் யசிந்தன் (25). இவா் அந்தப் பகுதியைச் சோ்ந்த கல்லூரி மாணவி ஒருவரை காதலித்து வந்தாா்.

அதன் பிறகு, யசிந்தனுக்கு தவறான பழக்கங்கள் இருப்பதை அறிந்த அந்த மாணவி அவருடன் பழகுவதை நிறுத்தினாா். ஆனால், யசிந்தன் தன்னிடம் மீண்டும் பேசிப் பழகுமாறு மாணவியை வற்புறுத்தினாா்.

Advertisement

Advertisement

இதற்கு மாணவி தொடா்ந்து மறுத்ததால் ஆத்திரமடைந்த யசிந்தன், சனிகிழமை மாணவியின் வீட்டுக்குச் சென்று, அவரை இழுத்து வந்து வாருகாலில் தள்ளிவிட்டு, கட்டையால் தாக்கினாா். அருகிலிருந்தவா்கள் வந்து மாணவியை மீட்டனா்.

இதில் பலத்த காயமடைந்த மாணவி விருதுநகா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து சூலக்கரை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து யசிந்தனை கைதுசெய்தனா்.