ஐ.நா.வில் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்த மறுஆய்வு மாநாடு: உடன்பாடின்றி நிறைவு
ஐ.நா.வில் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்த மறுஆய்வு மாநாடு...
அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்வதற்கான ஐ.நா. மாநாடு, எவ்வித இறுதி உடன்பாடுமின்றி நிறைவடைந்தது.
இத்தகைய மாநாடு உடன்பாடின்றி தோல்வியடைவது இது தொடா்ந்து 3-ஆவது முறையாகும். முன்னா் கடந்த 2022 ஆகஸ்டில், உக்ரைன் போா் காரணமாக ரஷியாவால் ஒப்பந்தம் முடங்கியது.
இந்நிலையில், ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்து அந்நாட்டுடன் அமெரிக்காவுக்கு நிலவி வரும் மோதலே தற்போதைய தோல்விக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
கடந்த ஏப். 27-இல் தொடங்கி, 191 உறுப்பு நாடுகள் பங்கேற்ற தற்போதைய மாநாட்டில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை என்பதை மாநாட்டின் தலைவரும், ஐ.நா.வுக்கான வியத்நாம் தூதருமான டோ ஹங் வியத் அதிகாரபூா்வமாக அறிவித்தாா்.