நம்பிக்கை நாயகன்!

ஐபிஎல்லில் தில்லியுடனான போட்டியில் இறுதிவரை பரபரப்பாகக் கொண்டு சென்றார் ரஷித் கான். இறுதி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஒரு சிக்ஸர் உள்பட 14 ரன்களை அடித்து எதிரணியை ஸ்தம்பிக்க வைத்தார்.

கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், ரன் அடிக்க முடியாததால் குஜராத் அணி தோற்றது.

குஜராத் தோற்றாலும் அந்த அணியின் வீரர் ரஷித் கானின் ஆட்டம் ரசிகர்களை இருக்கை நுனிக்குக் கொண்டு சென்றது.

நம்பிக்கையான ஆல்ரவுண்டர் பட்டியலில் ரஷித் கானுக்கு இடம் உண்டு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...