மார்ச் 12க்குள் தேர்தல் பத்திர விவரங்களை அளிக்க எஸ்பிஐ-க்கு உத்தரவு!

இணையதள செய்திப்பிரிவு

தேர்தல் நன்கொடை பத்திர விவரங்களைத் தாக்கல் செய்ய அவகாசம் கோரிய எஸ்பிஐ மனு தள்ளுபடி.

செவ்வாய் மாலைக்குள் விவரங்களை வெளியிட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு உத்தரவு

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மார்ச் 15க்குள் வெளியிட வேண்டும்.

விவரங்களை திரட்டி, அதனை சரிபார்க்க நேரம் தேவைப்படுகிறது என எஸ்பிஐ வாதம்

தகவல்களை சரிபார்க்குமாறு வங்கிக்கு உத்தரவிடவில்லை என்று உச்ச நீதிமன்றம் பதில்.

தேர்தல் பத்திர நன்கொடை விவரங்களை எஸ்பிஐ மூடிய உறையில் தேர்தல் ஆணையத்திடம் அளிக்க வேண்டும்.

தகவல்களை திரட்ட இத்தனை நாள்கள் வங்கி எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் நீதிமன்றம் கேள்வி

செவ்வாய் மாலைக்குள் விவரங்களை வெளியிடாவிட்டால் வங்கி அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்