DIN
வெற்றிகரமாக நிறைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் - 1 தொடரில் சித்ரா இறந்ததால் முல்லையாக நடிப்பவர்கள் அடிக்கடி மாறிக்கொண்டே இருந்தார்கள்.
என்னவோ எல்லாருமோ கதிர் கேரக்டருடன் பொருத்தமாகத்தான் இருந்தார்கள்.
இப்படியாக முல்லையாக வந்தவர்களில் ஒருவர்தான் நடிகை காவ்யா அறிவுமணி
பாண்டியன் ஸ்டோர்ஸ் இல்லத்தின் அரசிகளில் ஒருவராகக் கொஞ்ச காலம் கோலோச்சினார்.
திடீரென காணாமல் இவருக்குப் பதில் இவர் என்று வேறொருவர் வந்தார்.
திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புக் கிடைத்துச் சென்றுவிட்டதாகப் பேச்சு...
எளிதில் உச்சரித்துவிட முடியாத பெயர் கொண்ட ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
படத்தின் இசை விடியோ வெளிவந்துவிட்டது. படம் வந்த பின்னர் பார்க்க வேண்டும்.
ஆனாலும் இன்ஸ்டாவில் வெளியிடும் அவருடைய கவரும் படங்கள்தான் அவரா இவர் என்று முல்லையை நினைவுபடுத்தி அதிசயிக்க வைத்துக்கொண்டிருக்கின்றன!