சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளை மீறி ராஃபா நகரின் மையப் பகுதிக்கு இஸ்ரேல் ராணுவம் முன்னேறியுள்ளதால், அப்பகுதி மக்கள் வெளியேறி வருகின்றனர்.
பீரங்கி குண்டுகள், விமானத் தாக்குதல் என திங்கள்கிழமை இரவு ராஃபாவை சுற்றிவளைத்து இஸ்ரேல் தாக்கியது.
ராஃபா மையப் பகுதியில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள தல் அல்-சுல்தான் பகுதி அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஞாயிற்றுக்கிழமை குழந்தைகள் உள்பட 45 பேர் பலியாகினர்.
உயிரைக் காப்பாறிக் கொள்ள கிடைக்கும் வாகனங்களில் இருப்பிடத்தைவிட்டு வெளியேறி வருகின்றனர்.
இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த உறவினர்களின் உடல்களை வாகனங்களில் எடுத்துச் செல்லும் பாலஸ்தீன மக்கள்.