இணையதளச் செய்திப் பிரிவு
எஸ்ஐஆர் கணக்கீட்டுப் படிவம் சமர்ப்பிப்புக்கு நீட்டிக்கப்பட்ட அவகாசம் இன்றுடன் (டிச.14) நிறைவடைகிறது.
வரும் டிச.19 இல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான பின்னர், அதில் மேல்முறையீட்டை அடுத்த ஆண்டு ஜனவரி 18-ஆம் தேதி வரை வாக்காளர்கள் அளிக்கலாம்.
வாக்காளர் பட்டியலில் பெயா் இல்லாதவர்கள் புதிய வாக்காளர்களாக பெயர் சேர்க்க விண்ணப்பங்களை ஜன. 18-க்குள் பூர்த்தி செய்து வழங்கலாம்.
புதிய வாக்காளர்கள் படிவம்-6-ஐ பூர்த்தி செய்து சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
சமர்ப்பிப்பவர்களில் தகுதியுள்ளவர்களின் பெயர்கள், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் வெளியிடப்படும் இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும்.
பூர்த்தி செய்த படிவத்தை அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் சமர்ப்பிக்கலாம். அல்லது ‘இசிஐநெட்(ECI NET)’ செயலி அல்லது வலைதளம் மூலம் இணையவழியில் படிவத்தைச் சமர்ப்பிக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.