இணையதளச் செய்திப் பிரிவு
மார்கழி மாதத்தைப் பீடை மாதம் என்று சொல்வதுண்டு. அந்த மாதத்தில் எந்தவித நல்ல காரியங்களையும் செய்ய மாட்டார்கள்.
கிருஷ்ண பரமாத்மா மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்கிறார்.
இறைவனின் நாமங்களையும், புராணங்களையும் மனப்பூர்வமாக பாராயணம் செய்ய வேண்டும்.
அதிகாலையில் கோயிலுக்குச் செல்ல வேண்டும்.
மார்கழி மாதத்தில் அதிகாலைக்குப் பிறகு தூங்கக்கூடாது.
அதிகாலை நேரத்தில் இயற்கையிலிருந்து ஆதீதமான ஆக்சிஜன் சக்தி நமக்குக் கிடைக்கிறது.
மார்கழி மாதத்தில் பொதுவாக விதை விதைக்கக்கூடாது.
அதிகமான திருமணங்கள் மார்கழி மாதத்தில் நடைபெறுவதில்லை.
இரவில் கோலம் போடக்கூடாது.
இறைவனின் திருநாமத்தை ஜபிக்கக்கூடிய பஜனையில் கலந்துகொள்ளலாம்.
திருப்பாவையும், திருவெம்பாவையும் கட்டாயம் படிக்க வேண்டும்.
மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருப்பள்ளி எழுச்சியும் கட்டாயம் படிக்க வேண்டும்.
வைகுண்ட ஏகாதசியும், ஆருத்திரா என்கிற திருநாளும் வருகின்ற மாதம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.