இணையதளச் செய்திப் பிரிவு
முருகன் கோயிலில், இந்த மார்கழி மாதத்தில் மட்டும், வெந்நீரில் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.
ஆறு படை வீடுகளில், ஐந்தாவது படை வீடாக இருப்பது திருத்தணி. இங்குள்ள மூலவர் சுப்ரமணிய சுவாமியாவார்.
இந்த சந்நிதிக்கு பின்புறம் குழந்தை வடிவில் பால முருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
மார்கழி மாதம் என்றாலே குளிர்காலம். எனவே, குளிர்காலத்தில் குழந்தை வடிவில் இருக்கும் பால முருகனுக்கும் குளிருமல்லவா. எனவே, ஆதி பாலசுப்பிரமணியர் மீதுள்ள அன்பின் வெளிப்பாடாக, மார்கழி மாதம் முழுவதும் இவருக்கு வெதுவெதுப்பான வெந்நீரில் அபிஷேகம் செய்யப்படுகிறதாம்.
நாள்தோறும், பால முருகனுக்கு வெந்நீர் அபிஷேகம் காண ஏராளமான பக்தர்கள் காலை முதலே கோயிலில் திரள்வது வழக்கம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.