நரைமுடி நீங்க வேண்டுமென்றால், கறிவேப்பிலையை பச்சையாகச் சாப்பிட வேண்டும்.
மணதக்காளிக் கீரையைப் பாசிப் பயறுடன் கூட்டு சேர்த்து உண்டு வர ரத்த மூலம் குணமாகும்.
முருங்கைக் கீரையை நெய்யில் வதக்கி, சாப்பிட்டு வந்தால் ரத்தச் சோகை சரியாகும்.
வாய்ப்புண், வயிற்றுப்புண் இருந்தால் கறிவேப்பிலையை அரைத்து, மோரில் கலந்து குடிக்கவும்.
தினமும் பாதாம் சாப்பிடுவதால் தலைமுடி உதிர்வைத் தடுக்கும்.
பொடுகு நீங்க கசகசாவை பாலில் அரைத்து தடவலாம்.
தைராய்டு உள்ளவர்கள் முள்ளங்கியை தவிர்க்கலாம்.