பட்டாசு ஆலை வெடிவிபத்து என்பதும், அதைத் தொடர்ந்து நிகழும் உயிரிழப்புகளும் தொடர்கதையாகி வருகின்றன.
தீப்பெட்டி, பட்டாசுத் தொழில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தமிழ்நாட்டில் மட்டும் பத்து லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது.
இந்தியாவின் ஒட்டுமொத்த பட்டாசுத் தேவையில் 90%, தீப்பெட்டித் தயாரிப்பில் 80% விருதுநகர் மாவட்டத்தில்தான் தயாரிக்கப்படுகின்றன.
கோடை காலங்களில் பட்டாசுத் தயாரிப்பு முற்பகல் 11 மணிக்கு முன்பு முடிவடைய வேண்டும். ட்டாசுத் தயாரிப்பின் மூலப்பொருள்களில் ஒன்றான "சல்ஃபருக்கு' மேற்காசியப் போரால் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதைத் தொடர்ந்து "குளோரைடு' பயன்படுத்தப்பட்டதும் விபத்துக்குக் காரணமாகி இருக்கக்கூடும்.