முனைவா் வைகைச்செல்வன்
சர்வதேச போர்ப் பதற்றம், மத்திய வங்கிகள் தங்கம் வாங்குவது, டாலர் மதிப்பு சரிவு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை காரணமாக பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கத்தின் தேவை அதிகரிப்பால் விலை உயர்கிறது. அமெரிக்க வங்கிகளில் வட்டி விகிதக் குறைப்பு, பணவீக்கம் மற்றும் நகைக் கடைகளில் பண்டிகைக் கால தேவை அதிகரிப்பு ஆகியவை தங்கம் விலை உயர்வுக்கு முக்கியக் காரணங்களாக அமைந்திருக்கின்றன.
போர் மற்றும் வர்த்தகப் போட்டிகள் காரணமாக, பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை முதலீட்டாளர்கள் நாடுகிறார்கள். சீனா, ரஷியா போன்ற நாடுகள் டாலருக்கு மாற்றாக தங்கத்தை அதிக அளவில் வாங்கி சேமித்து வருகின்றன. மேலும், அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதங்களைக் குறைக்கும் என்கிற எதிர்பார்ப்பு தங்கம் விலை உயர்வதற்கு முக்கியக் காரணியாகும்.
கடந்த இரு ஆண்டுகளில் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. முதலீட்டாளர்களுக்குப் பாதுகாப்பான புகலிடமாக தங்கம் திகழ்ந்தாலும், ஏழை, எளியோரின் வாழ்க்கையில் எட்டாக்கனியாகி விட்டது. காலையில் ஒரு விலையும், மாலையில் மற்றொரு விலையும் என்று தங்கத்தின் விலை மேலும் மேலும் உயர்கிறது. வெள்ளியின் விலையும் அதே போன்ற நிலையில் உயரத் தொடங்கியிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.