சீனாவுக்கு காத்திருக்கும் சவால்!

பாறப்புறத் ராதாகிருஷ்ணன்

  • கடந்த 2025-ஆம் ஆண்டில் சீனாவில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 79.2 லட்சம்; இது முந்தைய 2024-ஆம் ஆண்டைவிட 16.2 லட்சம், அதாவது 17% குறைவாகும்.

  • கடந்த 2024-இல் பிறப்பு விகிதம் சற்றே அதிகரித்தது. முன்னதாக, 2023 வரை தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக பிறப்பு விகிதம் சரிந்துகொண்டே வந்தது.

  • கடந்த 2025-ஆம் ஆண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக இருந்தது. வரும் ஆண்டுகளில் இது குறையும்.

  • காரணம், நாட்டில் தொழிலாளர்கள் எண்ணிக்கை இறுகி, பொருள்கள் உற்பத்திச் சங்கிலி பாதிப்படையும். குறைந்து வரும் மக்கள்தொகையுடன், சீனாவில் அதிகரிக்கும் முதியோர்களின் எண்ணிக்கையும் இணைந்து சீனாவுக்கு பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி வருகின்றன.

  • சீனாவில் தற்போது அறுபது வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை 32.3 கோடியாக உள்ளது. இது மொத்த மக்கள்தொகையில் 23 சதவீதத்தை எட்டியுள்ளது.

  • 2035-ஆம் ஆண்டுக்குள் மொத்த மக்கள்தொகையில் சுமார் மூன்றில் ஒரு பங்கு முதியவர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • சீனாவில் வேலை செய்யும் வயதுடைய மக்கள்தொகை குறைந்து வருவது, அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேலும் சிக்கலாக்கும்.

  • எதிர்காலத்தில் பணியாளர்கள் குறைவு, உற்பத்தி குறைவு, ஓய்வூதியச் செலவு அதிகரிப்பு ஆகியவை நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும்.

  • சீனாவின் பெருந்துயரம் மற்ற நாடுகளுக்கு ஒரு பாடத்தை அளித்திருக்கிறது.

  • சீனா சந்தித்து வரும் பல்வேறு பிரச்னைகளில், மக்கள்தொகை வீழ்ச்சியையும் பெய்ஜிங் எவ்வாறு சமாளிக்கப் போகிறது என்பதை உலக நாடுகள் உற்று நோக்கி வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முழுக் கட்டுரையும் படிக்க..