இணையதளச் செய்திப் பிரிவு
பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்கின்றனர்.
ரயில்கள் நிரம்பி வழியும் நிலையில் ஆம்னி பேருந்துகளில் ஆயிரக்கணக்கில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
உதாரணமாக சென்னையில் இருந்து கோவைக்கு ரூ. 4,000 வரையிலும் நெல்லைக்கு ரூ. 4,500 வரையிலும் வசூலிக்கப்படுகிறது.
இதையடுத்து தமிழக அரசு புகார் எண்களை அறிவித்துள்ளது. அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள மக்கள் இந்த புகார் எண்கள் மூலம் தொலைபேசி வாயிலாகவோ, வாட்ஸ் ஆப் மூலம் குறுஞ்செய்தி அல்லது குரல் பதிவாகவோ புகார் தெரிவிக்கலாம்.
போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம், சென்னை -1800 425 6151 சென்னை (வடக்கு) - 99442 53404, சென்னை (தெற்கு) - 97905 50052
மதுரை - 90953 66394, கோயம்புத்தூர் - 91235 93971, விழுப்புரம் - 96773 98825, வேலூர் - 98400 23011, சேலம் - 78456 36423, ஈரோடு - 80569 40040, திருச்சிராப்பள்ளி - 90660 32343, விருதுநகர் - 90257 23800, திருநெல்வேலி - 96981 18011, தஞ்சாவூர் - 95850 20865.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.