பழ . கருப்பையா
எந்த உயிரினமும் தன் சொந்த இனத்தோடு மோதுவதுமில்லை; அதை அழிப்பதும் இல்லை! மனிதன் மட்டுமே தன் சொந்த இனத்தையே அழிக்கின்றவன்! கையையும், ஆறாவது அறிவையும் அவன் பயன்படுத்தி நாசமாக்கியவை எண்ணிலடங்கா!
வெனிசுலாவில் இவ்வளவு எண்ணெய் வளமா? அதன் அதிபர் மனைவியோடு கைது செய்யப்பட்டு அமெரிக்கச் சிறையில்! அவர்களை ஒரே அறையில் வைத்தால், குடும்பமாவது நடத்திக் கொண்டிருப்பார்கள்!
வல்லான் வகுத்ததே வாய்க்கால்! தனி மனிதனிலிருந்து ஆட்சியாளர்கள் வரை, இதுவே உலகின் நெறிமுறை ஆகி விட்டது!
விலங்குகள் பிற இனங்களிலிருந்து பாதுகாப்புக்காக மந்தைகளாகின்றன. அவற்றிற்குத் தன் மந்தைக்குள் எந்தச் சிக்கலுமில்லை! ஆனால், மனித மந்தை உட்சிக்கல் உடையது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.