தமிழகத்தில் வெப்பநிலை சனிக்கிழமை (ஏப். 4) வரை இயல்பைவிட அதிகமாக இருக்கக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக உள் மாவட்டங்களிலிருந்து வடக்கு உள் கா்நாடகம் வரை காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுவதன் காரணமாக, தென் தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை (ஏப். 2) முதல் 4 வரை மிதமான மழை பெய்யக் கூடும்.
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் ஏப்ரல் 5, 6 ஆகிய தேதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
தென் தமிழகம், வடக்கு கடலோரத் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஏப்ரல் 7-ஆம் தேதி மிதமான மழை பெய்யக் கூடும். சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில், வியாழக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) முதல் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 5) வரை இயல்பைவிட, அதிகமாக இருக்கக் கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.