மக்களாட்சிக்கு எதிரான சர்வாதிகார ஆட்சி போன்ற அரசியல் காரணங்களுக்காகவும், தேசியவாத, இனக் குழுக்களிடையே ஏற்படும் மோதல்கள் காரணமாகவும் போர்கள் வெடிக்கின்றன.
ஈரானில் டிரம்ப் மற்றும் நெதன்யாகுவின் "ஒரு சிறிய சுற்றுலாப் பயணம்' ஈரானிலுள்ள ஹோர்மோஸ்கான் மாகாணத்திலுள்ள மினாப் நகரில் பெண்கள் தொடக்கப் பள்ளி மீது "தவறுதலாக' நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலுடன் தொடங்கியது.
இந்தத் துயரச் சம்பவத்தில் 40 மாணவிகள் கொல்லப்பட்டனர். இது சர்வதேச சட்டங்களையும், தார்மிக நெறிகளையும் மீறிய செயல் என போரை எதிர்க்கும் நாடுகள் கூச்சலிட்டன.
நமது அண்டை நாடான பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான வெளிப்படையான போரில் காபூல் மருத்துவமனையிலுள்ள நோயாளிகள் உள்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.