கொத்துக் கொத்தாக கொடிய நோய்களுக்கு மக்கள் பலியான காலம் மாறி, இன்றைக்கு புதிய மருந்துகள் கண்டுபிடிப்பு, தடுப்பூசிகள், மருத்துவத்தில் அறிவியல் தொழில்நுட்பப் பயன்பாடு போன்ற காரணங்களால் இன்று மனித இனம் காக்கப்பட்டுள்ளது.
1870-ஆம் ஆண்டில் 40 முதல் 50 ஆண்டுகளாக இருந்த மனிதனின் சராசரி ஆயுள்காலம் இப்போது 72-ஆக அதிகரித்திருக்கிறது.
உடல் ஆரோக்கியத்துடன், மன ஆரோக்கியத்தையும் சேர்ந்து பராமரிப்பதன் மூலம் நோயற்ற வாழ்வு வாழ முடியும் என்பதை முதுமை குறித்தான ஆய்வுகள் நிரூபித்து வருகின்றன.
விசையுறு பந்தைப் போல் உள்ளம் வேண்டியபடி செல்லும் உடலைக் கேட்டார் மகாகவி பாரதியார். மூளையின் சிந்தனையே அனைத்துக்கும் அடிப்படை. நம் மூளையில் என்ன உருவாகிறதோ அதுவே நம்மை உருவாக்குகிறது.