இணையதளச் செய்திப் பிரிவு
தனிநபர்கள் மேற்கொள்ளும் 10 பணப்பரிமாற்றங்களை வருமான வரித்துறை கண்காணித்து நோட்டீஸ் அனுப்பும் வாய்ப்பு உள்ளது.
வங்கியில் உள்ள சேமிப்புக் கணக்கில் ரூ.10 லட்சத்துக்கு மேல் பணம் வரவு வைத்தால்.
நடப்புக் கணக்கில் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் வரவு வைத்தால் வருமான வரித்துறை கவனிக்கும்.
கிரெடிட் கார்டு கட்டணம் ரூ.1 லட்சத்துக்கு மேல் இருந்து அதனை பணமாக செலுத்தினால்.
ஒட்டுமொத்தமாக கிரெடிட் கார்டு கட்டணம் ரூ.2.10 லட்சத்துக்கு மேல் இருந்து அதனை செலுத்தினால்.
ரூ.30 லட்சத்துக்கு மேல் மதிப்புள்ள அடையா சொத்துகளை வாங்கினால் அல்லது விற்றால்.
ரூ.2.10 லட்சத்தை வைப்பு நிதியாக வங்கியில் செலுத்தும்போது வருமான வரித்துறை கவனிக்கும்.
ரூ.2.10 லட்சம் செலவு செய்து வெளிநாடு சுற்றுலா அல்லது அந்த மதிப்பில் அந்நியச் செலாவணியில் ஈடுபடுதல்.
ரூ.10 லட்சத்துக்கு மேல் பங்குகள், பத்திரங்களில் முதலீடு செய்யும்போது
ஆவணங்கள் ஏதுமின்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் அன்பளிப்பாக வழங்கினால் வருமான வரித்துறை கண்காணிக்கும்.
இந்த அதிகபட்ச வரம்புகளை மீறும்போது, ஒருவர் கணக்கு கண்காணிக்கப்பட்டு, வருவாய் குறித்து கேள்வி கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.