இணையதளச் செய்திப் பிரிவு
மகாராஷ்டிர துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அஜீத் பவார் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது.
விமானத்தில் இருந்த அஜித் பவார் உள்ளிட்டோர் உயிரிழந்ததை மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் உறுதி செய்திருக்கிறது.
விமானத்தில் பயணித்த 2 விமானிகள், அஜீத் பவாரின் பாதுகாப்பு அதிகாரி, உதவியாளர் உள்ளிட்ட அனைவரும் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், புணே மாவட்டம் பாராமதியில் நடைபெறவிருந்த பொதுக் கூட்டங்களில் பங்கேற்பதற்காக இன்று காலை மும்பையில் இருந்து தனி விமானம் மூலம் அஜீத் பவார் புறப்பட்ட நிலையில் விபத்து.
அஜீத் பவார் சென்ற விமானம் இன்று காலை 8.45 மணியளவில் தரையிறங்க முயற்சித்தபோது, நிலைத் தடுமாறி தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் விமானம் தீப்பிடித்து எரிந்தது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அஜீத் பவார் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு் செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.