உங்களுக்கு விருச்சிக லக்னம், கடக ராசி. பாக்கியாதிபதி பாக்கிய ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்றிருப்பது சிறப்பு. லக்னம் மற்றும் ஆறாம் வீட்டுக்கதிபதியான செவ்வாய்பகவான் எட்டாம் வீட்டில் விபரீத ராஜயோகம் பெற்று அமர்ந்து நவாம்சத்தில் உச்சம் பெற்றிருக்கிறார். தன பஞ்சமாதிபதியான குருபகவான் கர்ம ஸ்தானமான பத்தாம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். இந்த ஆண்டு மே மாதத்திலிருந்து லக்னாதிபதியான செவ்வாய்பகவானின் தசை நடக்கத் தொடங்கியுள்ளது. தற்சமயம் மீன ராசியில் அமர்ந்திருக்கும் ராகுபகவானின் புக்தி நடக்கத் தொடங்கியுள்ளது. அதோடு தற்சமயம் கோசாரத்தில் குரு, சனிபகவான்கள் சிறப்பான வலுப்பெற்றிருக்கிறார்கள். அதனால் அடுத்த ஆண்டு தொடங்கியுதும் செய்தொழிலில் வளர்ச்சி உண்டாகும். கடன்களும் அடையத் தொடங்கும். புத்திர ஸ்தானாதிபதி தன் ஆட்சி வீட்டைப் பார்வை செய்வதால் குழந்தைகளின் வாழ்வும் சீராகவே அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.
- ஆனந்தன், புதுச்சேரி