என் மகளுக்கு வரன் பார்த்து வருகிறேன். எம்மாதிரி வரன் அமையும்? சர்ப்ப தோஷம் உள்ளது. எந்த கோயிலுக்குச் சென்று பரிகாரம் செய்ய வேண்டும்? எந்த திசையில் வரன் அமையும்? - வாசகர், மதுரை
By DIN | Published On : 08th March 2019 10:28 AM | Last Updated : 08th March 2019 10:28 AM | அ+அ அ- |

உங்கள் மகளுக்கு கடக லக்னம், மீன ராசி. லக்னாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதும் பாக்கியாதிபதி ஆறாம் வீட்டில் ஆட்சி பெற்றிருப்பதும் சிறப்பு. தனாதிபதியும் பூர்வபுண்ணிய, தொழில் ஸ்தானாதிபதியும் களத்திர, நட்பு ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதும் களத்திர, மாங்கல்ய ஸ்தானாதிபதியான சனிபகவான் மாங்கல்ய ஸ்தானத்தில் களத்திர காரகருடன் இணைந்து ஆட்சி பெற்றிருப்பதும் சிறப்பு. நவாம்சத்திலும் குரு, சுக்கிர, சூரிய பகவான்கள் உச்சம் பெற்றிருக்கிறார்கள். ராகுபகவான் மூன்றாம் வீட்டிலும் கேதுபகவான் ஒன்பதாம் வீட்டிலும் அமர்ந்திருப்பதை சர்ப்ப தோஷம் என்று கூற முடியாது. அவருக்கு தற்சமயம் சுக்கிர மகாதசை நடக்கத் தொடங்கி ஓராண்டு ஆகிறது. அவருக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் படித்த நல்ல வேலையிலுள்ள வரன் கிழக்கு திசையிலிருந்து அமைந்து திருமணம் கைகூடும். பிரதி வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.