எனக்கு 3 பெண் குழந்தைகள். இரண்டு பெண்களும் அவர்கள் விருப்பப்படி திருமணம் செய்து கொண்டார்கள். தற்போது மூன்றாவது பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கிறோம். எங்கள் இனத்திலேயே திருமணம் செய்து கொடுக்க விரும்புகிறோம். திருமணம் குறித்து நிலையான பதில் சொல்வதில்லை. எங்களுக்குக் குழப்பமாக இருக்கிறது. பெற்றோர் விருப்பப்படி திருமணம் நடைபெறுமா? - வாசகி, திருவொற்றியூர்

உங்கள் மகளுக்கு கன்னி லக்னம், மகர ராசி, திருவோண நட்சத்திரம். லக்னத்தில் லக்னாதிபதி உச்சம் பெற்றிருப்பதால் அங்கு நீச்சம் பெற்று அமர்ந்திருக்கும் சுக்கிரபகவானுக்கு நீச்சபங்க ராஜயோகத்தைக் கொடுக்கிறார்.

உங்கள் மகளுக்கு கன்னி லக்னம், மகர ராசி, திருவோண நட்சத்திரம். லக்னத்தில் லக்னாதிபதி உச்சம் பெற்றிருப்பதால் அங்கு நீச்சம் பெற்று அமர்ந்திருக்கும் சுக்கிரபகவானுக்கு நீச்சபங்க ராஜயோகத்தைக் கொடுக்கிறார். ஐந்து மற்றும் ஆறாம் வீடுகளுக்கு அதிபதியான சனிபகவான் ஆறாம் வீட்டிலேயே ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார். சர்ப்ப தோஷம் உள்ளது. களத்திர ஸ்தானாதிபதி குருபகவான் தைரிய ஸ்தானத்தில் அமர்ந்து களத்திர ஸ்தானத்தையும் பாக்கிய ஸ்தானத்தையும் லாப ஸ்தானத்தையும் பார்வை செய்கிறார். தற்சமயம் லக்ன சுபரான ராகுபகவானின் தசையில் சுக்கிரபகவானின் புக்தி இன்னும் இரண்டாண்டுகள் வரை நடக்கும். இந்த காலகட்டத்திற்கு அவரின் தகுதிக்கேற்ற படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து பெற்றோர் நிச்சயித்த திருமணம் கைகூடும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com