எனது மகனுக்கு ஐந்தாண்டுகளுக்கு முன்னர் திருமணமாகி ஓர் ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னையால் கடந்த ஆண்டு விவாகரத்து ஆகிவிட்டது. என் மகனுக்கு மறுமணம் நடக்குமா? பேரன் எங்களிடம் வருவானா? பரிகாரம் ஏதும் செய்ய வேண்டுமா? - வாசகர், தாம்பரம்

உங்கள் மகனுக்கு கன்னி லக்னம், கன்னி ராசி, உத்திரம் நட்சத்திரம். லக்னாதிபதி மற்றும் தொழில் ஸ்தானாதிபதி லக்னத்தில் ஆட்சி , உச்சம், மூலதிரிகோணம் பெற்றிருக்கிறார்.

உங்கள் மகனுக்கு கன்னி லக்னம், கன்னி ராசி, உத்திரம் நட்சத்திரம். லக்னாதிபதி மற்றும் தொழில் ஸ்தானாதிபதி லக்னத்தில் ஆட்சி , உச்சம், மூலதிரிகோணம் பெற்றிருக்கிறார். பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானாதிபதியான சனிபகவான் குடும்ப ஸ்தானத்தில் உச்சம் பெற்றிருக்கிறார். களத்திர ஸ்தானாதிபதி மறைவு பெற்றிருந்தாலும் களத்திரம், பாக்கியம், லாப ஸ்தானங்களைப் பார்வை செய்கிறார். தற்சமயம் அஷ்டம ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் ராகுபகவானின் தசையில் இறுதிப்பகுதி நடப்பதால் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் தகுதியான பெண் அமைந்து மறுமணம் கைகூடும். அவரின் மகனும் இன்னும் நான்காண்டுகளுக்குப்பிறகு வந்து சேரும் வாய்ப்புள்ளது. பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com