எனது பேரன், பேத்திக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் குழந்தை பாக்கியமில்லை. எப்போது கிட்டும்? நல்ல வேலை கிடைக்குமா? பரிகாரம் ஏதும் செய்ய வேண்டுமா? - வாசகி, கும்பகோணம்

உங்கள் பேத்திக்கு ரிஷப லக்னம், விருச்சிக ராசி, அனுஷம் நட்சத்திரம். பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானாதிபதியான புதபகவான் சுக ஸ்தானத்தில் லக்னாதிபதி மற்றும் களத்திர ஸ்தானாதிபதியுடன்

உங்கள் பேத்திக்கு ரிஷப லக்னம், விருச்சிக ராசி, அனுஷம் நட்சத்திரம். பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானாதிபதியான புதபகவான் சுக ஸ்தானத்தில் லக்னாதிபதி மற்றும் களத்திர ஸ்தானாதிபதியுடன் இணைந்திருக்கிறார். புத்திரகாரகரான குருபகவான் குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்து பாக்கியாதிபதியான சனிபகவானைப் பார்வை செய்கிறார். இதனால் புத்திர பாக்கியம் உண்டு. உங்கள் பேரனுக்கு ரிஷப லக்னம், கன்னி ராசி, அஸ்தம் நட்சத்திரம். புத்திர ஸ்தானத்தில் சந்திரபகவானும் புத்திர ஸ்தானாதிபதி புத்திரகாரகருடன்இணைந்திருப்பதும் சிறப்பாகும். தற்சமயம் குருபகவானின் தசை நடக்கத் தொடங்கியுள்ளதால் இன்னும் இரண்டாண்டுகளுக்குள் புத்திர பாக்கியம் உண்டாகும். அவர் இருக்கும் வேலையிலேயே இன்னும் ஓராண்டு வரை இருக்க வேண்டும். அதற்குப்பிறகு தகுதிக்கேற்ற வேறு வேலைக்கு முயற்சி செய்யலாம். மற்றபடி சொந்தத் தொழில் எதுவும் செய்யக்கூடாது. எதிர்காலம் சிறப்பாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com