குடும்பத்தை விட்டுப் பிரிந்து வாழும் என் கணவர் என் மீதும் என் பிள்ளைகள் மீதும் வழக்குத் தொடர்ந்துள்ளார். இது எப்போது முடிவுக்கு வரும்? எனக்கு ஏழரை சனி நடக்கிறது. இதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? விவாகரத்து எப்போது கிடைக்கும்? - வாசகி, பாண்டிச்சேரி

உங்களுக்கு கன்னி லக்னம், மகர ராசி, உத்திராடம் நட்சத்திரம். தற்சமயம் பூர்வபுண்ணியாதிபதியான சனிபகவானின் தசையில் கேதுபகவானின் புக்தி முடியும் தருவாயில் உள்ளது.

உங்களுக்கு கன்னி லக்னம், மகர ராசி, உத்திராடம் நட்சத்திரம். தற்சமயம் பூர்வபுண்ணியாதிபதியான சனிபகவானின் தசையில் கேதுபகவானின் புக்தி முடியும் தருவாயில் உள்ளது. இன்னும் இரண்டாண்டுகளுக்குள் விவாகரத்து கிடைத்துவிடும். உத்தியோகத்திலிருந்து நல்லபடியாக ஓய்வு பெற்று விடுவீர்கள். கன்னி லக்னத்திற்கு சனிபகவான் யோக காரராக ஆவதால் ஏழரை நாட்டு சனியால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது. பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும். உங்கள் குழந்தைகளும் வாழ்க்கையில் நல்லபடியாக வளர்ச்சியடைந்து விடுவார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com