உங்களுக்கு கன்னி லக்னம், மகர ராசி, உத்திராடம் நட்சத்திரம். தற்சமயம் பூர்வபுண்ணியாதிபதியான சனிபகவானின் தசையில் கேதுபகவானின் புக்தி முடியும் தருவாயில் உள்ளது. இன்னும் இரண்டாண்டுகளுக்குள் விவாகரத்து கிடைத்துவிடும். உத்தியோகத்திலிருந்து நல்லபடியாக ஓய்வு பெற்று விடுவீர்கள். கன்னி லக்னத்திற்கு சனிபகவான் யோக காரராக ஆவதால் ஏழரை நாட்டு சனியால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது. பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும். உங்கள் குழந்தைகளும் வாழ்க்கையில் நல்லபடியாக வளர்ச்சியடைந்து விடுவார்கள்.