இரட்டையர்களாகப் பிறந்த எனது மகள்களுக்கு திருமணம் எப்போது நடைபெறும்? செவ்வாய் தோஷம் உள்ளதா? எத்திசையில் வரன் அமையும்?  - வாசகர், காரைக்குடி

உங்கள் இரண்டு மகள்களுக்கும் (இரட்டையர்கள்) விருச்சிக லக்னம், மகர ராசி, உத்திராடம் நட்சத்திரம்.

உங்கள் இரண்டு மகள்களுக்கும் (இரட்டையர்கள்) விருச்சிக லக்னம், மகர ராசி, உத்திராடம் நட்சத்திரம். லக்னாதிபதியான செவ்வாய்பகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் வர்கோத்தமத்தில் திக்பலம் பெற்று அமர்ந்திருக்கிறார். செவ்வாய் தோஷம் இல்லை. குருபகவான் லக்னத்தில் அமர்ந்து பூர்வபுண்ணிய ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் சனிபகவானையும் களத்திர நட்பு ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் புத, சுக்கிர பகவான்களையும் பாக்கிய ஸ்தானத்தையும் பார்வை செய்கிறார். தற்சமயம் ராகுபகவானின் தசையில் குருபகவானின் புக்தி நடக்கிறது. அவர்களுக்கு இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் படித்த நல்ல வேலையிலுள்ள வரன்கள் அமைந்து திருமணம் கைகூடும். இருவருக்கும் அரசு வேலை கிடைக்கும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் பிரதி வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியையும் வழிபட்டு வரவும். இருவருக்கும் எதிர்காலம் சிறப்பாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com