என் மகனுக்கு 35 வயதாகியும் இன்னும் திருமணம் நடைபெறவில்லை. இதற்கிடையில் வீடு கட்ட நெருக்கடி உண்டாகி உள்ளது. பணம் பற்றாக்குறை உள்ளது. வீடு கட்டுவதைத் தொடங்கலாமா? திருமணம் எப்போது கைகூடும்? எனக்கு உடல்நிலையில் தொந்தரவு உள்ளது. எஞ்சிய வாழ்க்கை எப்படி இருக்கும்?  -வாசகர், சிங்கம்புணரி

உங்களுக்கு விருச்சிக லக்னம், சிம்ம ராசி, பூரம் நட்சத்திரம். லக்னம் மற்றும் ஆறாம் வீட்டிற்கு அதிபதியான செவ்வாய்பகவான் ஆறாம் வீட்டில் விபரீத ராஜயோகம் பெற்று மூலதிரிகோணம் பெற்றமர்ந்திருக்கிறார்.

உங்களுக்கு விருச்சிக லக்னம், சிம்ம ராசி, பூரம் நட்சத்திரம். லக்னம் மற்றும் ஆறாம் வீட்டிற்கு அதிபதியான செவ்வாய்பகவான் ஆறாம் வீட்டில் விபரீத ராஜயோகம் பெற்று மூலதிரிகோணம் பெற்றமர்ந்திருக்கிறார். இவருடன் தன, பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியான குருபகவானும் இணைந்திருக்கிறார். தைரிய சுகாதிபதியான சனிபகவான் அயன ஸ்தானத்தில் லக்னாதிபதியின் சாரத்தில் உச்சம் பெற்று அமர்ந்திருக்கிறார். இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் உங்கள் மகனுக்கு திருமணம் கைகூடும். மற்றபடி வீடு கட்டத் துவங்குவதை இன்னும் மூன்றாண்டுகளுக்குத் தள்ளிப்போடவும். உடலாரோக்கியத்தில் பெரிய பாதிப்பு என்று எதுவும் ஏற்படாது. எதிர்காலம் சிறப்பாக அமையும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com