மகாலட்சுமியை வழிபடவும்
என் மகளுக்கு திருமணமாகி விவாகரத்தாகிவிட்டது. மறுமணம் நடைபெறுமா? எப்போது நடைபெறும்? வரன் எப்படி அமையும்? பரிகாரம் செய்ய வேண்டுமா?
- வாசகா், நுங்கம்பாக்கம்
உங்கள் மகளுக்கு விருச்சிக லக்னம், மேஷ ராசி, பரணி நட்சத்திரம். லக்னம், ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் பன்னிரண்டாம் வீட்டில் தொழில் ஸ்தானாதிபதியான நீச்சபங்க ராஜயோகம் பெற்றிருக்கும் சூரியபகவானுடனும் அஷ்டம, லாபாதிபதியான விபரீத ராஜயோகம் பெற்றிருக்கும் புதபகவானுடனும் இணைந்து இருக்கிறாா். செவ்வாய்பகவான் நவாம்சத்தில் உச்சம் பெற்றிருக்கிறாா். புதஆதித்ய யோகம், பெளா்ணமி யோகம், சந்திரமங்கள யோகம் ஆகிய சிறப்பான யோகங்கள் உண்டாகின்றன. தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும் பூா்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் தொழில் ஸ்தானத்தில் சுக்கிரபகவானுடன் இணைந்து சுக்கிரபகவானின் சாரத்தில் வா்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே ராசியில் அமரும் நிலை) அமா்ந்திருக்கிறாா். தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும் சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் தைரிய ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்று அமா்ந்திருக்கிறாா். தற்சமயம் பாக்கியாதிபதியின் தசையில் சுகாதிபதியின் புக்தி நடப்பதால் இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து மறுமணம் கைகூடும். வெளிநாடு சென்று வசிக்கும் யோகமும் உண்டு. பிரதி வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வழிபட்டு வரவும்.