என் மகன் கணினி பொறியியல் படித்து நல்ல வேலையில் இருந்தார். எட்டு வருடங்களாக ஒரு பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

என் மகன் கணினி பொறியியல் படித்து நல்ல வேலையில் இருந்தார். எட்டு வருடங்களாக ஒரு பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

என் மகன் கணினி பொறியியல் படித்து நல்ல வேலையில் இருந்தார். எட்டு வருடங்களாக ஒரு பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அந்தப் பெண் வாழ விரும்பாமல் விவாகரத்து பெற்றுக்கொண்டு சென்று விட்டார். என் மகன் கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே அடைந்து கிடப்பதைப் பார்க்க பெற்றோர்களுக்கு மனம் பதைக்கிறது. எப்பொழுது மறுமணம் நடக்கும்? மீண்டும் வேலைக்கு எப்பொழுது செல்வார்? 

-வாசகர், பெங்களூரு. 

உங்கள் மகனுக்கு மேஷ லக்னம், விருச்சிக ராசி, அனுஷ நட்சத்திரம் ஒன்றாம் பாதம். லக்னாதிபதி, எட்டாமதிபதியான செவ்வாய் பகவான் லக்னத்தில் தன் மூலத்திரிகோண ராசியில், கேது பகவானின் சாரத்தில் (அசுவினி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார். 

லக்னத்தில் செவ்வாய் பகவான் அமர்ந்திருப்பதால் பஞ்சமஹா புருஷ யோகங்களிலொன்றான "ருசக யோகம்' உண்டாகிறது. செவ்வாய் பகவான் பூமிகாரகர் (பூமி புத்திரனாவார்). இதனால் நிலத்தின் மூலமாகவும், பூமியிலிருந்து கிடைக்கும் பொருட்களின் மூலமாகவும், கட்டுமானம், செங்கல், சிவப்பு நிறப் பொருள்கள் மூலமாகவும் நன்மை செய்வார். 

காவல்துறை, ராணுவம், நில அளவைத் துறை (சர்வே), ஆலை, நெருப்பு, மருந்தாளுநர், கால்நடை மருத்துவம், இயன்முறை மருத்துவம் (பிசியோதெரபி) போன்றவற்றிற்கும் காரணமாகிறார். 

லக்னாதிபதி லக்னத்தில் பலம் பெற்றிருப்பதால் வாழ்க்கை பெரிய ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் ராஜபாட்டையில் செல்லும். சந்திர பகவான் நான்காம் வீட்டோனாகி, அஷ்டம ஸ்தானம், ஆயுள், புதையல் ஸ்தானமான எட்டாம் வீட்டில் சனி பகவானின் சாரத்தில் (அனுஷம் நட்சத்திரம்) நீச்சம் பெற்று நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார். 

நீச்சனேறிய ராசிநாதன் (செவ்வாய் பகவான்) ஆட்சி பெற்றிருப்பதால் முழுமையான நீச்சபங்கத்தையும் பெறுகிறார். அதோடு சந்திராலக்னத்திற்கு அதிபதி சந்திர பகவானை (செவ்வாய் பகவான் எட்டாம் வீட்டை எட்டாம் பார்வையாக) பார்வை செய்கிறார். 

இதனால் சந்திராலக்னமும் வலுக்கிறது. லக்ன பாவத்திலிருந்து கிரகங்கள் வலு குறைந்திருக்கும் பட்சத்தில், சந்திர ராசியிலிருந்து பார்த்தும் பலன் கூறவேண்டும் என்பது சத்தியாச்சாரியரின் வாக்கு. 

பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கு அதிபதியான சூரிய பகவான் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் ராகு பகவானின் சாரத்தில் (சதயம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தனுசு ராசியை அடைகிறார். 

தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும் ருணம் (கடன்), ரோகம் (வியாதி), சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவான் லாப ஸ்தானத்தில் குரு பகவானின் சாரத்தில் (பூரட்டாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மேஷ ராசியை அடைகிறார். 

சிறப்பான புத ஆதித்ய யோகம் லாப ஸ்தானத்தில் உண்டாகி, அவர்கள் இருவரின் பார்வையும் பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானத்தின் மீது படிகிறது. பொதுவாக சூரிய, புத பகவான்களின் இணைவை "நிபுணத்துவ யோகம்' என்பார்கள். இவர்கள் லக்னத்திலிருந்தோ அல்லது சந்திர பகவான் இருக்குமிடத்திலிருந்தோ 1, 4, 8 -ஆம் வீடுகளில் அமர்ந்திருந்தால் "பிரபல ராஜயோகம்' என்று கூறுவார்கள். 

விருச்சிக ராசியிலிருந்து நாலாம் வீட்டில் இந்த யோகம் ஏற்படுவது சிறப்பாகும். பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும், அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் அயன ஸ்தானத்தில் சனி பகவானின் சாரத்தில் (உத்திரட்டாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார். 

குரு பகவானின் ஐந்தாம் பார்வை சுக ஸ்தானத்தின் மீதும், ஏழாம் பார்வை ஆறாம் வீட்டின் மீதும் அங்கமர்ந்திருக்கும் கேது பகவானின் மீதும், ஒன்பதாம் பார்வை அஷ்டம ஆயுள் ஸ்தானத்தின் மீதும், அங்கமர்ந்திருக்கும் ஆயுள் காரகரான சனி பகவானின் மீதும், சந்திர (குரு சந்திரயோகம்) பகவானின் மீதும் படிகிறது. 

தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும், களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவான் பாக்கிய ஸ்தானத்தில் சுய சாரத்தில் (பூராடம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியை அடைகிறார். 

பத்தாம் வீட்டிற்கும், பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான சனி பகவான் எட்டாம் வீட்டில் புத பகவானின் சாரத்தில் (கேட்டை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கும்ப ராசியை அடைகிறார். 

கேது பகவான் ஆறாம் வீட்டில் சந்திர பகவானின் சாரத்தில் (அஸ்த நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியையும், ராகு பகவான் பன்னிரண்டாம் வீட்டில் புத பகவானின் சாரத்தில் (ரேவதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தனுசு ராசியையும் அடைகிறார்கள். 

அவருக்கு ஆறாமதிபதியின் தசை இறுதிப் பகுதியில் கடுமையான காலமாக நடந்தது. தற்சமயம் கேது பகவானின் தசையில் சந்திர பகவானின் புக்தி இந்த ஆண்டு இறுதிவரை நடக்கும். அடுத்த ஆண்டு தொடங்கியவுடன் அவருக்கு படிப்புக்கேற்ற நல்ல வேலை கிடைக்கும். 

அடுத்த ஆண்டு இறுதிக்குள் படித்த நல்ல வேலையிலுள்ள பெண் தெற்கு திசையிலிருந்து அமைந்து மறுமணம் கைகூடும். வெளிநாடு சென்று பொருளீட்டும் யோகமும் உண்டு. பிரதி திங்கள்கிழமைகளில் விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com