இந்தியாவில் மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்படும் அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டர் வரும் ஆகஸ்ட் 22ம் தேதி அறிமுகமாகிறது.
இத்தாலியை சேர்ந்த பியாஜியோ நிறுவனத்தின், அப்ரிலியா பிராண்டின் கீழ் இந்த ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்படுகிறது
150சிசி, 3 வால்வ், ஏர்-கூல்ட், சிங்கிள் சிலிண்டர் இஞ்சினுடன் வெளிவரும் எஸ்ஆர் 150 அதிகபட்சமாக 11.39 பிஹெச்பி ஆற்றலையும், 11.5 என்எம் இழுவைத்திறனையும் கொண்டது. முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் போர்க்ஸையும், பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷன் யூனிட்டையும் கொண்டிருக்கிறது. சிவிடி கியர்பாக்ஸூடன், 6 லிட்டர் கொள்ளளவு கொண்ட ப்யூல் டேங்கையும் கொண்டிருக்கும் எஸ்ஆர் 150யில், இரு பக்கத்திலும் 120/70 செக்ஷன் 14 இஞ்ச் அல்லாய் வீல்கள் பொருத்தப்பட்டிருக்கிறது. மேட் பிளாக் மற்றும் வைட் ஆகிய இரு வண்ணங்களில் எஸ்ஆர் 150 கிடைக்கிறது.
2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட இந்த ஸ்கூட்டர் பெரும் கவனத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது. அப்ரிலியா எஸ்ஆர் ஸ்கூட்டரை நாடு முழுவதுமுள்ள வெஸ்பா ஷோரூம்களிலும், Paytm இணையத்தளத்திலும் முன்பதிவு செய்துகொள்ளலாம். அப்ரிலியா எஸ்ஆர் 150 ஸ்கூட்டரின் அறிமுக விலையாக, ரூ. 65,000ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மஹாராஷ்ட்ரா மாநிலம் பாராமதியிலுள்ள பியாஜியோவின் ஆலையில் தயாரிக்கப்படும் எஸ்ஆர் 150 ஸ்கூட்டர், இந்தியாவில் தயாரிக்கப்படும் முதல் அப்ரிலியா மாடலாகும். எஸ்ஆர் 150ஐ தொடர்ந்து மேலும் சில எஸ்ஆர் வகை ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்த அப்ரிலியா திட்டமிட்டுள்ளது. மேலும் இங்கு உற்பத்தியாகும் எஸ்ஆர் 150 ஸ்கூட்டர்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் அப்ரிலியா திட்டமிட்டிருக்கிறது.