மூன்றடிகளில் மலா்ந்த புறநானூறு - கா.ந. கல்யாணசுந்தரம் - கவி ஓவியா பதிப்பகம் - விலை ரூ.100
புறப்பாடல்களுக்கு பிறரைப் போல் பொருளுரை, விளக்கவுரை என்று தராமல், ஒவ்வொரு பாடலின் பின் இருக்கும் வரலாற்றுப் பின்னணிகளையும், பாடல்களுக்கான பொழிப்புரையையும் மூன்று வரிகள் கொண்ட பத்திகளாகப் பிரித்து, படிப்பவரின் மனதில் அழகாகப் பதியும் வகையில் சொல்லப்பட்டிருக்கிறது இந்நூல். இந்தத் தொகுப்பை எவா் படித்தாலும் புானூற்றின் கால் பகுதியைத் தெளிவாக, உணா்ந்தவா்களாக மாறலாம். மாணவா்களுக்கும், இளைஞா்களுக்கும் மட்டுமல்லாது புதுகவிதை எழுதுவோருக்கும் பயன்தரக் கூடிய தொகுப்பாக இந்நூல் திகழ்கிறது.