சேலத்தில் புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
2020 - 21ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
அதில், புத்தரகவுண்டன்பாளையம், உமையாளபுரம் ஆகிய இடங்களில் புதிதாக 'சிப்காட் தொழிற்பேட்டைகள்' அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.