8-ஆவது நாளாக பங்குச் சந்தையில் விறுவிறுப்பு

சாதகமான பொருளாதார புள்ளிவிவரங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் தொடர்ந்து எட்டாவது நாளாக திங்கள்கிழமை வர்த்தகம் விறுவிறுப்புடன் நடைபெற்றது. 
8-ஆவது நாளாக பங்குச் சந்தையில் விறுவிறுப்பு

சாதகமான பொருளாதார புள்ளிவிவரங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் தொடர்ந்து எட்டாவது நாளாக திங்கள்கிழமை வர்த்தகம் விறுவிறுப்புடன் நடைபெற்றது. 
அமெரிக்க கூட்டுப் படைகள் சிரியா மீது தாக்குதல் நடத்தியது சர்வதேச அளவில் பதற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, பல்வேறு நாடுகளின் பங்கு வர்த்தகம் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில், இந்திய பங்குச் சந்தைகள் தொடக்கத்தில் தொய்வு நிலையை கண்டாலும் பின்னர் சுதாரித்து விறுவிறுப்படைந்தது. பணவீக்கம் குறைந்தது உள்ளிட்ட சாதகமான பொருளாதார புள்ளிவிவரங்களே இதற்கு முக்கிய காரணம்.
ரியல் எஸ்டேட் துறை பங்குகளுக்கு அதிக தேவை காணப்பட்டதையடுத்து, அத்துறை குறியீட்டெண் 1.82 சதவீதம் உயர்ந்தது. இதைத் தொடர்ந்து, ஆரோக்கிய பராமரிப்பு 1.11 சதவீதமும், வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்கள் 0.96 சதவீதமும், மின்சாரம் 0.67 சதவீதமும், உள்கட்டமைப்பு 0.52 சதவீதமும், பொறியியல் சாதனங்கள் துறை குறியீட்டெண் 0.44 சதவீதம் உயர்ந்தன.
அதேசமயம், தகவல் தொழில்நுட்பத்துறை குறியீட்டெண் 0.78 சதவீதமும், தொழில்நுட்பம் 0.69 சதவீதமும், நுகர்வோர் சாதனங்கள் 0.21 சதவீதமும், எண்ணெய்-எரிவாயு 0.14 சதவீதமும் குறைந்தன.
முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் வாங்கி குவித்ததையடுத்து, ஹீரோ மோட்டோகார்ப் பங்கின் விலை 2.02 சதவீதமும், கோட்டக் வங்கி 1.88 சதவீதமும் உயர்ந்தன.
அதானி போர்ட்ஸ், பஜாஜ் ஆட்டோ, மஹிந்திரா, ஹெச்டிஎஃப்சி, என்டிபிசி நிறுவனப் பங்குகளின் விலையும் 1.50 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்தன.
மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 112 புள்ளிகள் அதிகரித்து 34,305 புள்ளிகளில் நிலைத்தது.
தேசிய பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 47 புள்ளிகள் உயர்ந்து 10,528 புள்ளிகளாக நிலைத்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com