நிலக்கரி துறை செயலராக சுமந்தா சௌத்ரி பொறுப்பேற்பு

மத்திய நிலக்கரி துறையின் புதிய செயலராக சுமந்தா சௌத்ரி  செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
நிலக்கரி துறை செயலராக சுமந்தா சௌத்ரி பொறுப்பேற்பு


மத்திய நிலக்கரி துறையின் புதிய செயலராக சுமந்தா சௌத்ரி  செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது: நிலக்கரி துறையின் செயலராக இருந்த ஜித் சிங்கிற்கு புதிய பணி கொடுக்கப்படவிருப்பதாக மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறை அறிவித்தது. 
இதையடுத்து, அந்தப் பொறுப்புக்கு சுமந்தா சௌத்ரியை நியமிப்பதாக கேபினட் நியமனக் குழு கடந்த நவம்பர் 17-ஆம் தேதி அறிவித்தது.
இந்த சூழ்நிலையில், நிலக்கரி துறையின் புதிய செயலராக சுமந்தா சௌத்ரி செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுமந்தா சௌத்ரி கடந்த 1985-ஆம் ஆண்டில் இந்திய ஆட்சிப் பணிக்கு தேர்வானவர்.இவர் இப்பதவியில் நியமிக்கப்படுவதற்கு முன்பு, சிறிய விவசாயிகளுக்கான வேளாண்-வர்த்தக கூட்டமைப்பின் நிர்வாக இயக்குநராக இருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com