அந்நியச் செலாவணி கையிருப்பு 91 கோடி டாலர் சரிவு

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு அக்டோபர் 5-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 91 கோடி டாலர் (ரூ.6,410 கோடி) குறைந்தது.
அந்நியச் செலாவணி கையிருப்பு 91 கோடி டாலர் சரிவு

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு அக்டோபர் 5-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 91 கோடி டாலர் (ரூ.6,410 கோடி) குறைந்தது.
 இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
 அந்நியச் செலாவணி கையிருப்பில் தொடர்ந்து சில வாரங்களாகவே ஏற்ற இறக்கம் காணப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த அக்டோபர் 5-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 91 கோடி டாலர் குறைந்து 39,961 கோடி டாலராகி உள்ளது. இதற்கு, அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு வீழ்ச்சி கண்டதே முக்கிய காரணம்.
 இதற்கு முந்தைய வாரத்திலும் செலாவணி கையிருப்பு 126.5 கோடி டாலர் சரிந்து 40,052 கோடி டாலராக காணப்பட்டது.
 மதிப்பீட்டு வாரத்தில் ஒட்டுமொத்த கையிருப்பில் முக்கிய அங்கமாக உள்ள அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு 101 கோடி டாலர் குறைந்து 37,523 கோடி டாலராக இருந்தது.
 அதேசமயம், தங்கத்தின் கையிருப்பு 10.73 கோடி டாலர் குறைந்து 2,045 கோடி டாலராக காணப்பட்டது.
 சர்வதேச நிதியத்தில் எஸ்டிஆர் அளவு 43 லட்சம் டாலர் குறைந்து 146.6 கோடி டாலராகவும், நம்நாடு வைத்துள்ள கையிருப்பு 72 லட்சம் டாலர் குறைந்து 246 கோடி டாலராகவும் காணப்பட்டது என ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு நடப்பாண்டு ஏப்ரல் 13-ஆம் தேதியன்றுதான் வரலாற்றில் முதல் முறையாக 42,602 கோடி டாலராக காணப்பட்டது. அதன் பிறகு செலாவணி கையிருப்பில் சரிவு நிலையே நீடித்து வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com