தேங்காய் பொருள்கள் ஏற்றுமதி விறுவிறு!

தேங்காய் பொருள்கள் ஏற்றுமதி கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.6,448 கோடியாக அதிகரித்துள்ளது.
தேங்காய் பொருள்கள் ஏற்றுமதி விறுவிறு!


தேங்காய் பொருள்கள் ஏற்றுமதி கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.6,448 கோடியாக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து மத்திய வேளாண் அமைச்சகம் திங்கள்கிழமை கூறியதாவது:
ஐக்கிய முற்போக்கு கூட்டணி 10 ஆண்டு ஆட்சி காலத்தில் தேங்காய் பொருள்களின் ஏற்றுமதி ரூ.3,975 கோடி அளவுக்கே இருந்தது. இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிப் பொறுப்பேற்று நான்கே ஆண்டுகளில் அதன் ஏற்றுமதி ரூ.6,448 கோடி அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது.
தேங்காய் பொருள்களின் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு 5 சதவீத ஊக்கத் தொகையை அளித்து வருகிறது என வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com