ஸ்டார் யூனியன் டையிச்சி லைஃப் இன்சூரன்ஸ் பங்குகள் விற்பனை

பேங்க் ஆஃப் இந்தியா அதன் இன்சூரன்ஸ் கூட்டு நிறுவனமான ஸ்டார் யூனியன் டையிச்சி லைஃப்பில் கொண்டுள்ள பங்குகளை விற்பனை செய்வதாக
ஸ்டார் யூனியன் டையிச்சி லைஃப் இன்சூரன்ஸ் பங்குகள் விற்பனை


பேங்க் ஆஃப் இந்தியா அதன் இன்சூரன்ஸ் கூட்டு நிறுவனமான ஸ்டார் யூனியன் டையிச்சி லைஃப்பில் கொண்டுள்ள பங்குகளை விற்பனை செய்வதாக அறிவித்துள்ளது. 
இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு தெரிவித்துள்ளதாவது:
இன்சூரன்ஸ் கூட்டு திட்டத்தில் ஸ்டார் யூனியன் டையிச்சி லைஃப்பில்  வைத்துள்ள 25.05 சதவீத பங்குகளை ரூ.1,106 கோடிக்கு விற்பனை செய்ய பேங்க் ஆஃப் இந்தியா முடிவு செய்துள்ளது. பங்கு ஒன்றின் விலை ரூ.170.50 என்ற ஆதார விலை அடிப்படையில் இந்த தொகை திரட்டிக் கொள்ளப்படும்.
தேவையற்ற சொத்துகளை விற்று நிதி திரட்டும் திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என பேங்க் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.
ஸ்டார் யூனியன் டையிச்சி (எஸ்யுடி) லைஃப் இன்சூரன்ஸ் என்பது பேங்க் ஆஃப் இந்தியா, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் டையிச்சி லைஃப் ஆகியவற்றின் கூட்டு நிறுவனமாகும். 
அந்த நிறுவனத்தில் இந்நிறுவனங்களின் பங்களிப்பானது முறையே, 28.96 சதவீதம், 25.10 சதவீதம், 45.94 சதவீதமாக உள்ளது.
கடந்த 2009 பிப்ரவரியில் தொடங்கப்பட்ட எஸ்யுடி  லைஃப்பின் பிரீமியம் வருவாய் 1,211 கோடியாகவும், 2018-19 ஏப்ரல்-டிசம்பர் காலத்தில் வரிக்கு பிந்தைய லாபம் ரூ.55 கோடியாகவும் இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com