சோழமண்டலம் எம்எஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம், இடர் மேலாண்மை முறையை சிறப்பாக பயன்படுத்தியமைக்காக டியூவி இந்தியா வழங்கும் ஐஎஸ்ஓ 31000:2018 தரச் சான்றிதழைப் பெற்றுள்ளது.
இதுகுறித்து சோழா எம்எஸ் நிர்வாக இயக்குநர் எஸ்எஸ் கோபாலரத்னம் கூறியதாவது:
சோழா எம்எஸ், இடர் மேலாண்மை நடைமுறைகளை வலுப்படுத்துவதில் முக்கிய கடமையாக கருதி செயல்பட்டு வருகிறது. மேலும், இத்துறையில் சர்வதேச தரத்துக்கு இணையான அளவீடுகளை கட்டமைப்பதில் நிறுவனம் உறுதியுடன் உள்ளது. அவற்றை அங்கீகரிக்கும் வகையில் இந்த சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
ஐஎஸ்ஓ 31000:2018 தரச் சான்றிதழ் பெற்ற பொதுக் காப்பீட்டு நிறுவனமாக உருவெடுத்துள்ளது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. இது, எங்களின் "விஷன் 2025' திட்டத்துக்கு மிகவும் ஊக்கமளிப்பதாக இருக்கும் என்றார் அவர்.
இந்த ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் 3 ஆண்டுகளுக்கு பொருந்தும்.