மத்திய அரசு, ஜிஎஸ்டி விற்பனை கணக்குகளை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மேலும் மூன்று நாட்களுக்கு (ஏப்.23 வரை) நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து ஜிஎஸ்டி வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வர்த்தகர்கள் மார்ச் மாதத்துக்கான விற்பனை கணக்குகளை ஏப்ரல் 20-ஆம் வரை தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அந்த காலக்கெடு மேலும் மூன்று நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, வர்த்தகர்கள் தங்களது மார்ச் மாதத்துக்கான ஜிஎஸ்டி விற்பனை கணக்குகளை ஏப்ரல் 23-ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.