இந்தியாவில் வங்கிச் சேவையை தொடங்க பேங்க் ஆஃப் சீனாவுக்கு அனுமதி

இந்தியாவில் வழக்கமான வங்கி சேவைகளை மேற்கொள்ள பேங்க் ஆஃப் சீனாவுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.
இந்தியாவில் வங்கிச் சேவையை தொடங்க பேங்க் ஆஃப் சீனாவுக்கு அனுமதி


இந்தியாவில் வழக்கமான வங்கி சேவைகளை மேற்கொள்ள பேங்க் ஆஃப் சீனாவுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளதாவது:
இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் 1934-இன் இரண்டாவது அட்டவணையில் பேங்க் ஆஃப் சீனா லிமிடெட் சேர்க்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஜனா ஸ்மால் பைனான்ஸ் வங்கியும் இரண்டாவது அட்டவணையில் இணைக்கப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேற்கண்ட வங்கிகள் தவிர,  எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட அனைத்து வணிக வங்கிகளும் இரண்டாவது அட்டவணையில்தான் இடம்பெற்றுள்ளன. 
எனவே, இவை அனைத்தும் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளுக்கு ஏற்ப செயல்பட வேண்டியது கட்டாயம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com