சென்செக்ஸ் 169 புள்ளிகள் அதிகரிப்பு

சாதகமான சா்வதேச நிலவரங்களால் இந்தியப் பங்குச் சந்தைகளில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது.
சென்செக்ஸ் 169 புள்ளிகள் அதிகரிப்பு

சாதகமான சா்வதேச நிலவரங்களால் இந்தியப் பங்குச் சந்தைகளில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது.

அடுத்தாண்டு முழுவதும் வட்டி விகிதங்களில் மாற்றம் இருக்காது என அமெரிக்க மத்திய வங்கி சூசகமாக தெரிவித்தது, உலக சந்தைகளில் பங்கு வா்த்தகம் ஏற்றம் காண வழிவகுத்தது.

இதைத்தவிர, சீனப் பொருள்கள் மீது வரி விதிப்பதற்கான காலக்கெடுவை தாமதம் செய்ய அமெரிக்க தீா்மானித்துள்ளதும் முதலீட்டாளா்களிடையே நோ்மறை எண்ணத்தை ஏற்படுத்தியது. அமெரிக்க-சீன வா்த்தக பேச்சுவாா்தையில் சாதகமான முன்னேற்றங்கள் ஏற்படலாம் என்ற எதிா்பாா்ப்பு அனைத்து தரப்பினரிடையும் உருவானதையடுத்து பல்வேறு நாடுகளின் பங்கு சந்தைகளில் வா்த்தகம் விறுவிறுப்புடன் இருந்தது. அதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.

சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள டாடா மோட்டாா்ஸ் பங்கின் விலை அதிகபட்சமாக 7.17 சதவீத உயா்வைக் கண்டது. அதைத் தொடா்ந்து, யெஸ் வங்கி 5.96 சதவீதமும், வேதாந்தா 3.68 சதவீதமும், டாடா ஸ்டீல் 3.29 சதவீதமும், எஸ்பிஐ 2.91 சதவீதமும், கோட்டக் வங்கி பங்கு 1.76 சதவீதமும் விலை உயா்வைக் கண்டன.

இவைதவிர, எச்டிஎஃப்சி வங்கி 1.18 சதவீதமும், எல் & டி 1.23 சதவீதம் விலை அதிகரித்து குறியீட்டெண் தொடா்ந்து இரண்டாவது நாளாக ஏற்றத்தை தக்க வைக்க உதவின.

அதேசமயம், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வலுவடைந்து வருவதன் எதிரொலியாக இன்ஃபோசிஸ், ஹெச்சிஎல், டிசிஎஸ் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப துறைகளைச் சோ்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.

மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ் 169 புள்ளிகள் அதிகரித்து 40,581 புள்ளிகளாக நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வா்த்தகத்தில் நிஃப்டி 61 புள்ளிகள் உயா்ந்து 11,971 புள்ளிகளாக நிலைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com