சென்செக்ஸ் 67 புள்ளிகள் சரிவு

மும்பை பங்குச் சந்தையில் வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 67 புள்ளிகள் சரிவைக் கண்டது.


மும்பை பங்குச் சந்தையில் வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 67 புள்ளிகள் சரிவைக் கண்டது.
சர்வதேச சந்தைகளில் காணப்பட்ட மந்த நிலை, நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் சந்தை எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில் இல்லாதது போன்றவற்றால் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சுணக்கமாகவே காணப்பட்டது.
மேலும், சாதகமற்ற சூழ்நிலைகளால் அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குச் சந்தைகளிலிருந்து முதலீட்டை வெளியே எடுத்ததும் பங்குச் சந்தை இறக்கத்துக்கு மேலும் வழிகோலியது.
மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 67 புள்ளிகள் சரிந்து 35,808 புள்ளிகளில் நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 21 புள்ளிகள் குறைந்து 10,724 புள்ளிகளில் நிலைத்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com