ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் புதிய எண்டவர் கார் வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான அனுராக் மெஹ்ரோத்ரா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
நவீன தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்ட மேம்படுத்தப்பட்ட புதிய எண்டவர் கார் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
2.2 லிட்டர் மற்றும் 3.2 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்ட மாடல்களின் விலை ரூ.28.19 லட்சம் முதல் ரூ.33.31 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 6 வகை வேக ஆட்டோ கியர் வசதியை இக்கார் உள்ளடக்கியுள்ளது.
வாடிக்கையாளர்களின் தேவையை கருத்தில் கொண்டு மேம்படுத்தப்பட்ட எண்டவரில் பல்வேறு புதிய தொழில்நுட்ப வசதிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
புதிய எண்டவர் காரில் 18-அங்குல அலாய் வீல்கள், இருக்கைகளை பயணிகளின் விருப்பப்படி மாற்றியமைத்துக் கொள்ளும் வசதி உள்ளிட்டவை வாடிக்கையாளர்களுக்கு சொகுசான பயண அனுபவத்தை வழங்கும் என்றார் அவர்.