நடப்பு நிதியாண்டுக்கு இடைக்கால ஈவுத்தொகையாக ரூ.2,951.88 கோடியை நாட்டின் மிகப்பெரிய மின்உற்பத்தியாளராக திகழும் என்டிபிசி நிறுவனம் வெள்ளிக்கிழமை வழங்கியது.
இதுகுறித்து அந்த நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
வரும் மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிதியாண்டுக்கு இடைக்கால ஈவுத்தொகையாக ரூ.2,951.88 கோடியை என்டிபிசி வழங்கியுள்ளது. இது நிறுவனத்தின் அளிக்கப்பட்ட பங்கு மூலதனத்தில் 35.8 சதவீதமாகும்.
என்டிபிசி நிறுவனத்தில் மத்திய அரசின் பங்கு மூலதனம் 58.93 சதவீதமாக உள்ளது. இதையடுத்து, இதற்கான இடைக்கால ஈவுத்தொகை பங்களிப்பாக மத்திய அரசு ரூ.1,739.61 கோடியைப் பெற்றுள்ளது. இந்த தொகையை மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங்கிடம் என்டிபிசி தலைவரும், நிர்வாக இயக்குநருமா குர்தீப் சிங் வழங்கினார்.
நிறுவனம் 26-ஆவது ஆண்டாக தொடர்ந்து வழங்கும் ஈவுத்தொகையாகும் இது என்று என்டிபிசி தெரிவித்துள்ளது.