கனரா ரொபேகோ பரஸ்பர நிதி நிறுவனத்தின் நிர்வாகக் குழு தலைவராக ஜெயராமன் பாலசுப்ரமணியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
கனரா ரொபேகோ பரஸ்பர நிதி நிறுவனத்தின் சிறப்பு நிர்வாகியாக ஜெயராமன் பாலசுப்ரமணியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அத்துடன், நிர்வாகக் குழு தலைவராகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரது நியமனங்களுக்கு ஒழுங்காற்று அமைப்பான செபி தனது ஒப்புதலை வழங்கியுள்ளது.
அவரது நியமனம் கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பர் 20-ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக கனரா ரொபேகோ அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.