அந்நியச் செலாவணி சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 4 காசுகள் உயர்ந்தது.
அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களைகுறைக்கும் என்ற எதிர்பார்ப்பு, சீனா-அமெரிக்கா இடையில் ஏற்பட்டுள்ள வர்த்தக நெருக்கடிக்கு பேச்சுவார்த்தையின் மூலம் நல்ல தீர்வு காணப்படும் என்ற நிலைப்பாடு ஆகியவற்றால் அந்நியச் செலாவணி சந்தையில் வர்த்தகம் சூடுபிடித்து காணப்பட்டது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 4 காசுகள் உயர்ந்து 69.68-இல் நிலைத்தது. இரண்டாவது நாளாக ரூபாய் மதிப்பு அதிகரித்துள்ளது.